/* */

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் மீண்டும் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் மீண்டும் சோதனை
X

தங்கமணி, முன்னாள் அமைச்சர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 14 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் தமிழகம் மற்றும் ஆந்திராவில், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு நெருக்காமன. அரசு சிவில் கான்ட்ராக்டர்கள் உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் பல இடங்களுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தங்கமணிக்கு நெருக்கமான ஒப்பந்தததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் பெரியசாமிக்கு சொந்தமான கொல்லிமலை வாலுக்குழிப்பட்டியில் உள்ள கெஸ்ட் ஹவுஸ், மங்களம் பகுதியில் உள்ள பண்ணை வீடு, மகன் அசோக்குமாருக்கு சொந்தான எருமப்பட்டியில் உள்ள டெக்ஸ்டைல் மில், அவரது வீடு, அலுவலகம், அசோக்குமாரின் மைத்துனர் தீபன் சக்ரவர்த்திக்கு சொந்தமான நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள வீடு, பரமத்திவேலூரில் உள்ள அசோக்குமாரின் மாமனார் சண்முகம் வீடு, நாமக்கல் அழகு நகரில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் மோகனுக்கு சொந்தமான கோழிப்பண்ணை மற்றும் வீடு, மோகனூர் ரோட்டில் பிவிஆர் தெருவில் உள்ள ஹேச்சரீஸ் நிறுவனம், பள்ளிபாளையத்தில் உள்ள ஆடிட்டர் செந்தில்குமார் வீடு, சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள ஹோடல் அதிபர் மணிகண்டன் வீடு, ஈரோட்டில் ஒண்டிக்காரன்பாளையத்தில் உள்ள செந்தில்நாதன் வீடு, வீரப்பன் சத்திரத்தில் உள்ள கோபாகிருஷ்ணன் வீடு, திண்டல் பாலசுந்தரம் வீடு உள்ளிட்ட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனயின் முடிவில் வருமானத்திற்கு அதகமாக சேர்த்துள்ள சொத்துக்கள் தெரியவரும் என்று பேலீசார் கூறினர்.

Updated On: 20 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...