Begin typing your search above and press return to search.
ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் ரேஷன் அரிசி வருகை
ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு, சரக்கு ரயில் மூலம், 2,600 டன் ரேஷன் அரிசி வந்துள்ளது.
HIGHLIGHTS
இந்திய உணவு கழகத்தின் மூலம், ஆந்திர மாநிலத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அரிசி மூட்டைகள் 140 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல்- திருச்செங்கோடு ரோட்டில் உள்ள சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் குடோனுக்கும், புதுப்பட்டியில் உள்ள இந்திய உணவு கழகத்தின் குடோனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.