பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Namakkal news-பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரப் பேச்சைக் கண்டித்து நாமக்கல்லில் மகளிர் காங்கிரஸ் சார்பில் பெண்கள் தாலியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரப் பேச்சைக் கண்டித்து நாமக்கல்லில் மகளிர் காங்கிரஸ் சார்பில் பெண்கள் தாலியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற, பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், பெண்களின் மங்களகரமான தாலி குறித்து, தரக்குறைவாக பேசிய பிரதமர் மோடியின் பேச்சைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர், தாலி குறித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தவறாக பேசியதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர காங்கிரஸ் தலைவர் மோகன், புதுச்சத்திரம் வட்டார தலைவர் இளங்கோ, சாந்திமணி மற்றும் திரளான காங்கிரசார் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.