Begin typing your search above and press return to search.
புதன்சந்தை பகுதிகளில் ஏப்.1ல் மின் வினியோகம் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக ஏப்.1ம் தேதி, மின் வினியோகம் நிறுத்தம்.
HIGHLIGHTS
புதன்சந்தை பகுதியில் ஏப்.1ல் மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை ஏப்.1ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்தடை ஏற்படும்.
இதனால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூனுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.