/* */

நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரின் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்

Awareness - நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

Awareness | Police Today
X

ராசிபுரத்தில் போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற, போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Awareness - போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி ராசிபுரம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் முன்னிலை வகித்தார். பேரணியில் போலீசார் மற்றும் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய ரோடுகள் வழியாகச் சென்று, ஆத்தூர் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கஞ்சா, குட்கா, புகையிலை, பான் மசாலா உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த போஸ்டர்களை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாமகிரிப்பேட்டை காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்டன் தலைமையில் நாமகிரிப்பேட்டையில் இருந்து சீராப்பள்ளி வரை போலீசார் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் சீராப்பள்ளி, ஆயில்பட்டி போலீஸ் நிலையங்கள் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமை வகித்தார். அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருச்செங்கோடு காவல்துறை சார்பில் குமாரமங்கலத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகனங்கள் அடங்கிய போஸ்டர்களை கையில் பிடித்தபடி சென்றனர். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு டிஎஸ்பி சீனிவாசன், ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், விவேகானந்தா கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Jun 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு