மக்கள் குறைதீர் முகாமில் 686 மனுக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கல்
Collector Petition -நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
HIGHLIGHTS
Collector Petition -நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 686 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 70 பேருக்கு, ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 956 மதிப்பில் சைக்கிள்களை கலெக்டர் வ ழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ (பொ) மல்லிகா, டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், சமூக பாதுகாப்புத்திட்ட சப்கலெக்டர் தேவிகாராணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2