/* */

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

பெரியூர் ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயிலில் வரும் மே. 19ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

பெரியூர்  மருதகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
X

பெரியூர் ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயில் பொதுக்குழு கூட்டத்தில் பேசும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் 

பெரியூர் ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிசேக விழாவை, மே 19ம் தேதி நடத்துவதென்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, பெரியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோயில் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் தூரன் குலம் மற்றும் பண்ணை குலத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். மேலம் தற்போதைய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் ஆகியோர் இக்கோயிலின் குடிப்பாட்டுதாரர்கள் ஆவார்கள்.

பழமை வாய்ந்த இந்த கோயில் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்பட்டதால், இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுடன், கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோயில் முன்புறம் 3 நிலைகளிகளில் ராஜகோபுரம், மூலவர் தங்க கோபுரம் மற்றும் பரிவார தொய்வங்களுக்கான கோபுரங்கள் மற்றும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் இக்கோயில் திருப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

தற்போது திருப்பணிகள் முடிவடையும் நிலையில், கோயில் குடிப்பாட்டுதாரர்களின் பொதுக்குழு கூட்டம் இன்று கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் திருப்பணிக்குழு தலைவர் பாலசுப்பிரமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் மாரப்பன், பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற மே மாதம் 19ம் தேதி காலை 7.25 மணிக்கு கும்பாபிஷேசேக விழாவை சிறப்பாக நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் கும்பாபிஷேக விழாவிற்காக, இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய நதிகள் அனைத்தில் இருந்தும் தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டும், மேலும், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து, பிரமாண்டமான யாகசாலை பூஜைகளை நடத்துவது என்றும் யாகசாலை பூஜைகள் நிறைவுற்ற பின் மகா கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கவும், பல்வேறு வகையான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தனித்தனி குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திரளான தூரன் குலம் மற்றும் பண்ணை குல குடிப்பாட்டு மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Feb 2024 10:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!