/* */

நாமக்கல் எம்பி.,க்கு மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு

நாமக்கல்லைச் சேர்ந்த எம்.பி ராஜேஷ்குமார், மீண்டும் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் எம்பி.,க்கு  மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு
X

ராஜேஷ்குமார். எம்.பி.,

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள ராஜேஷ்குமார், கடந்த ஆண்டு முதல் திமுக ராஜ்சயசபா எம்.பியாக பணியாற்றி வருகிறார். இவருடைய பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் முடிவடைகிறது. வருகின்ற ஜூன் மாதம் 10ம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள, 6 ராஜ்யசபா எம்.பிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் திமுக சார்பில் 3 இடங்களுக்கும், காங்கிரஸ் சார்பில் ஒரு இடங்களுக்கும் எம்.பி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் 3 இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தஞ்சை கல்யாணசுந்தரம், நாமக்கல் ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மூவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. நாமக்கல் ராஜேஷ்குமார் எம்.பி, மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 15 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...