/* */

ஒருவந்தூரில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாட்டு சிலை திறப்பு விழா

ஒருவந்தூர் கிராமத்தில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாடு சிலை திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒருவந்தூரில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாட்டு சிலை திறப்பு விழா
X

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூரில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாட்டு சிலை திறக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்தூரில் கிராம பஞ்சாயத்து சார்பில், முன்னாள் மோகனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணன் நினைவாக, ரூ.4 லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாடு சிலை மற்றும் சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா, ஒருவந்தூர் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செல்லராசாமணி தலைமையில் நடைபெற்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வக்கீல் பாலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பூங்காவை திறந்து வைத்தார்.

ஒருவந்தூர் பஞ்சாயத்து தலைவர் அருணா காளை மாட்டு சிலையை திறந்து வைத்தார். ரியல் எஸ்டேட் உரிமையாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ருத்ராதேவி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!