Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏதும் பதிவாகவில்லை: கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில் பெரும் வெடிச்சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் நில நடுக்கம் ஏதும் பதிவாகவில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல், மோகனூர், ப.வேலூர், இராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 11 மணியளவில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் படபடத்தன. வீடுகளில் கடும் அதிர்வு ஏற்பட்டதால் கதவுகள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் நில நடுக்கம் ஏதும் பதிவாகவில்லை, பொதுமக்கள் பீதியடையவேண்டாம் என தெரிவித்துள்ளார். வானத்தில் சூப்பர் சானிக் விமானங்கள் செல்லும்போது இதுபோன்ற அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.