நாமக்கல்லில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் துவக்கிவைப்பு
நாமக்கல் பகுதியில், ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை, எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் பகுதியில் உள்ள என்ஜிஜிஓ காலனி, ராஜீவ்காந்தி நகர், இபி காலனி லட்சுமி நகர் மற்றும் வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 500 கிலோவாட் திறனுள்ள 4 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் துவக்க விழா நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மின் மாற்றிகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குறைந்த அழுத்த மின் விநியோகத்தால், பொதுமக்களின் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் பழுதடையாமல் பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் புதிய மின் மாற்றகிளை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 ÷ காடி மதிப்பீட்டில், 44 புதிய மின்மாற்றிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நாமக்கல் பகுதியில் 4 இடங்களில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் 500 மெகாவாட் திறன் கொண்ட 4 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வோருக்கு தடையற்ற மற்றும் குறைந்த அழுத்தம் இல்லாத, சீரானமின் விநியோகம் வழங்கப்படும் என்றார். முன்னாள் எம்.பி. சுந்தரம், நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகர், உதவி செயற்பொறியாளர் சவுந்தரபாண்டியன், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.