Begin typing your search above and press return to search.
நாமக்கல் அருகே டூ வீலரில் சென்ற விவசாயி தவறி விழுந்த உயிரிழப்பு
நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில், டூ வீலரில் சென்ற விவசாயி தவறி விழுந்த உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே உள்ள, வள்ளிபுரம் மணியாரம் புதூரைச் சேர்ந்தவர் கந்தசாமி (57). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது டூ வீலரில், வள்ளிபுரத்தில் இருந்து பாலப்பட்டிநோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, எம்.ராசாம்பாளையம், அரியானூற்று அருகே சென்றபோது டூ வீலரில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.
இதனால் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரழந்தார். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.