Begin typing your search above and press return to search.
பயிற்சியில் முதலிடம் பெற்ற எஸ்.ஐ.,க்கு நாமக்கல் எஸ்.பி. பாராட்டு
திருச்சியில் நடைபெற்ற பயிற்சியில் முதலிடம் பெற்ற நாமக்கல் எஸ்.ஐக்கு, மாவட்ட எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.
HIGHLIGHTS
தமிழக காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் இருந்து, ரெகுலர் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான 9 வார கால அடிப்படை பயிற்சி, திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.
இதில் சேலம் மாநகரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருச்சி மாநகரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 131 சிறப்பு எஸ்ஐ.,க்கள் பங்கேற்றனர். 9 வார கால பயிற்சியில் கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்டம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.
ரெகுலர் எஸ்ஐ.,க்கான அனைத்து பயிற்சிகளிலும் முதன்மையாளராக வெற்றி பெற்று, நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பயிற்சி எஸ்.ஐ., வேலுமணியை, மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார்.