/* */

நாமக்கல்: புதிய குடிநீர் திட்ப்பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ ராமலிங்கம் வலியுறுத்தல்

நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எம்எல்ஏ ராமலிங்கம் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

HIGHLIGHTS

நாமக்கல்: புதிய குடிநீர் திட்ப்பணிகளை  விரைந்து முடிக்க எம்எல்ஏ ராமலிங்கம் வலியுறுத்தல்
X

நாமக்கல் நகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டார்.

நாமக்கல் நகராட்சிப் பகுதிக்காக ஜேடர்பாளையத்தில் இருந்து ரூ.180 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நகராட்சிப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதிய குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, நகராட்சி பகுதியில் தடையில்லாமல், சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மதியழகன், உதவி நிர்வாக பொறியாளர்கள் சங்கரன், வரதராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...