/* */

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவக்கம்

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்கப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவக்கம்
X

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி பைல் படம்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், வரும் 10ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரில், 2022–23ம் ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு (பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி) மாணவர் சேர்க்கை, வரும், 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. வரும், 10ம் தேதி, காலை 10 மணிக்கு, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு சேர்க்கை நடக்கிறது. அதையடுத்து பிற பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் மொபைல் போன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. அழைப்புவிடுக்கப்பட்ட மாணவர்கள் நேரில் வந்து, உரிய துறையில் சேர்க்கை பெறலாம். நேரில் வரும்போது, மாற்றுச்சான்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் உண்மை சான்று, 5 நகல்கள் கொண்டு வரவேண்டும். மேலும் பெற்றோரையும் அழைத்து வரவேண்டும்.

கல்லூரியில் சேரும் மாணவர்கள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர் தரவரிசை பட்டியல் aagacnkl.edu.in என்ற கல்லூரி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பு வராத மாணவர்கள், துறைத்தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 3 Aug 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...