/* */

நாமக்கல்: 2 நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: 2 நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

நாமக்கல் கோட்டையில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கையும் 352 ஆக உள்ளது. மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், கடந்த 1வாரமாக பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது.

கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு தடுப்பூசி என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை 72 இடங்களில் 9,900 பேருக்கு தடுப்பூசி பேடப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 2,700 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 8 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் என மொத்தம் 10,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் 2 நாட்களில் மொத்தம் 20,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Updated On: 13 Jun 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை