/* */

நாமக்கல் மாவட்ட தடகளப் போட்டி: மோகனூர் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்

நாமக்கல் மாவட்ட தடகளப் போட்டியில் மோகனூர், அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட தடகளப் போட்டி: மோகனூர் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்
X

நாமக்கல் மாவட்ட தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மோகனூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  

நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான, தடகள விளையாட்டுப் போட்டிகள், ராசிபுரம் தாலுக்கா, மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அதில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

இப்பள்ளி மாணவி கீர்த்தனா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீ. தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், குதித்து எட்டித்தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்றார்.

மாணவி தர்ஷினி, 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் முதலிடம், நீளம் தாண்டும் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், மாணவி ஸ்ரீசிவநிதி 400 மீ., 800 மீ., ஓட்டம், நீளம் தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்தார்.

மாணவி விஜிதா 100 மீ., தடை தாண்டும் போட்டியில் முதலிடம், குதித்து எட்டித்தாண்டும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி சந்தியா குண்டு எறியும் போட்டியில் முதலிடம், வட்டு எறியும் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.

மாணவி கவிஷா 80 மீ., தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகள் கவிஷா, ரித்திகா, இலக்கியா, காவியாஸ்ரீ ஆகியோர் 400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர்.

மேலும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீ. தொடர் ஓட்டத்தில், மாணவியர் ஸ்ரீசிவநிதி, விஜிதா, பூஜாஸ்ரீ, கோபிகா ஆகியோர் இரண்டாமிடமும், 1,600 மீ. தொடர் ஓட்டத்தில் மாணவியர் ஸ்ரீ சிவநிதி, கோபிகா, கலைச்செல்வி, பிரியா ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி சந்தியா, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி ஸ்ரீசிவநிதி, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி கீர்த்தனா ஆகியோர் பல போட்டிகளில் வெற்றிபெற்று, அதிக புள்ளிகளைப் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

அதேபோல், 76 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று இப்பள்ளி சாதனை படைத்தது. வெற்றி பெற்ற மாணவியரை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் சுடரொளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Updated On: 23 Oct 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?