Begin typing your search above and press return to search.
நாமக்கல்: கூலித்தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிய எம்எல்ஏ
கொரோனா ஊரடங்கால் நாமக்கல் நகரில் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் நகரில் சிட்கோ காலனி, அண்ணா நகர் காலனி ,பெரியப்பட்டி அருந்ததியர் காலனி, நரிக்குறவர் காலனி ஆகிய இடங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கொரோனா ஊடங்கால் வேலை வாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தனது சொந்தநிதியில் இருந்து, அரிசி, மளிகை சாமான்கள், முட்டை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், நகர திமுக பொறுப்பாளர்கள் சிவக்குமார், பூபதி, முன்னாள் கவுன்சிலர்கள் சரவணன், ரவீந்திரன், பாலாஜி, வார்டு செயலாளர்கள் அருட்செல்வன், மாறன், குட்டி (எ) செல்வகுமார், தனசேகரன், ரமேஷ் அண்ணாதுரை, நாசர்பாசா, சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.