/* */

நாமக்கல் மாவட்டத்தில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை

நாமக்கல்லில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவித்தொகை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை, கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில், 18 வயதுக்கும் குறைவான, பல்வேறு உடற்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவித்தொகை வழங்கும் வகையில், கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில், அரசு டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மூலம், பயனாளிகளுக்கு வயதுதளர்வு குறித்த பரிசோதனை முகாம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தாலுக்கா வாரியாக, நாமக்கல் 18, குமாரபாளையத்தில் -25 பேர், ராசிபுரம் 27, மோகனூர் 4, சேந்தமங்கலம் 15, திருச்செங்கோடு 10, ப.வேலூர் 5, கொல்லிமலை 2 பேர் என, மொத்தம் 106 பேர் பங்கேற்றனர்.

மன வளர்ச்சி குன்றிய 12 பேர், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட 8 பேர், கண்பார்வை குறைபாடுடைய 9 பேர், கை, கால் பாதிக்கப்பட்ட 30 பேர், காதுகேளாத 26 பேர், ஆகிய 85 பேருக்கு வருவாய்த்துறையின், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம், மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், 75 சதவீதத்துக்கும் மேல் உடற்குறைபாடு உடைய, 5 பேருக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ. 1,500 வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம், 14 பேருக்கு, மாற்றுத்திறனாளிகள் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையும், ஒருவருக்கு புதிய அட்டையும், கலெக்டரால் வழங்கப்பட்டது. டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 6 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...