/* */

நாமக்கல்: கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையங்களை திறக்க பா.ஜ. கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையங்களை திறக்க பா.ஜ. சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

நாமக்கல்: கட்டி முடிக்கப்பட்ட  இ-சேவை மையங்களை திறக்க பா.ஜ. கோரிக்கை
X

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள, இ-சேவை மையங்களை விரைவில் திறக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் துறை மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ். திட்டத்தின் கீழ், சுமார் 150 க்கும் மேற்பட்ட இ-சேவை மையக்கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவை திறக்கப்படாமல், இ-சேவை மையங்கள் செயல்படாமல் உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பிப்பு, வாரிசு சான்றிதழ், மின் கட்டணம் செலுத்துதல், ரயில் முன் பதிவு போன்ற சேவைகள் எளிதில் கிடைப்பதில்லை.

இதனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையக்கட்டிடங்களை விரைவில் திறந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...