நாமக்கல்லில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர், எம்.பி வாழ்த்து
நாமக்கல் நகராட்சியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் நாமக்கல், ராசிபுரம் ஆகிய நகராட்சிகள் மற்றும் வெண்ணந்தூர், ஆர்.புதுப்பட்டி, அத்தனூர், பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, பிள்ளாநல்லூர், காளப்பநாய்க்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர் ஆகிய 11 டவுன் பஞ்சாயத்துக்களிலும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அனைத்து இடங்களிலும், திமுக வேட்பாளர்கள் பெரும்பான்øமையாக வெற்றிபெற்றுள்ளனர்.
வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் அனைவரும், நாமக்கல் நகரில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர், வெற்றிபெற்ற வேட்பாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று நாமக்கல் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.