Begin typing your search above and press return to search.
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியது துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிக்கு கல்லூரி முதல்வர் பாரதி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கிவைத்தார்.
நுண்ணுயிரி துறைத்தலைவர் முத்துமணி வரவேற்றார். செல்வம் கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் எழிலரசு தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பேசினார்.
அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பொன்ராஜ், மோகன்ராஜ் மற்றும் தீபக் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மாணவியர்களுக்கு நோய் ஏற்படுத்தும் கிருமிகளின் ஊடுருவல் தன்மை அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விளக்கமளித்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.