Begin typing your search above and press return to search.
களியனூர் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்
Collector Petition- கழிவு நீர் தேங்கி சாலையில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
Collector Petition- இதுகுறித்து களியனூர் கிராம மக்கள் கூறியதாவது:
பள்ளிபாளையம் களியனூர் பஞ்சாயத்து கணபதிபாளையம் பராசக்தி நகர் 1வது வார்டு 2 வது வார்டு பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் பஞ்சாயத்து மூலம் இரண்டு வீதிகளிலும் கான்கிரீட் மூலம் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் சென்ற பாதையின் இறுதியில் தனியார் இருவர் சுவர் எழுப்பி அடைத்து விட்டனர். இதனால் இரண்டு வீதியின் கழிவுநீரும் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2