நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டியில் புதிய மின் இணைப்பு பாதை துவக்கம்
நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டியில் புதிய மின் இணைப்பு பாதை துவக்கி வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டியில் ஏற்கனவே இருந்த மின் இணைப்பு பாதை, அணியாபுரம் மின்சார லைனில் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் காற்று, மழை போன்ற காலங்களில் மின்பாதையில் பழுது ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் முல்லை நகர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையொட்டி நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் முயற்சியில், மாருதி நகர் 22 கேவி மின் பாதை மற்றும் அணியாபுரம் 22 கே.வி. மின் பாதைகளுக்கு இடையே சுமார் ரூ. 7.5 லட்சம் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் புதிய இணைப்பு மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையாட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய மின் இணைப்பு பாதையை துவக்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 3,500 மின் நுகர்வோர் தடையில்லா மின்வசதி பெற்று பயன்பெறுவார்கள். நாமக்கல் தெற்கு நகர தி.மு.க. செயலாளர் ராணா ஆனந்த், நகராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரன், இளம்வழுதி மற்றும் திமுக பிரமுகர்கள் அன்பழகன், உமாசங்கர், கடலரசன், கார்த்தி, மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த்பாபு, பிரேம்நாத், சவுந்திரபாண்டியன், உதவி பொறியாளர்கள் சந்திரன், கார்த்தி, சிறப்பு நிலை முகவர்கள் கோபாலகிருஷ்ணன், கணேசன், சசிகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.