/* */

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள்

வீடுகளில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் ரெட் கிராஸ் சார்பில் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள்
X

ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் வீடுகளில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் ரெட் கிராஸ் சார்பில் வழங்கப்படுகிறது.

இது குறித்த நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று தாக்கி, குறைவான பாதிப்பு உள்ள பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சில நேரங்களில், அவர்கள் வீடுகளில் இருக்கும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. அந்த நேரங்களில் அவர்களுக்கு செயற்கையாக ஆக்சிஜன் தேவைப்படும். எ னவே அவர்கள் வீட்டில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் 10 லிட்டர் அளவிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இலசமாக வழங்கப்படுகிறது. டாக்டர் பரிந்துரையின் அடிப்படையில், முன்பதிவு செய்பவர்களுக்கு வரிசைப்படி ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கப்படும். இந்த இயந்திரத்திற்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். நோயாளிகளின் வீடுகளில் வைத்து 15 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் திருப்பிக் கொடுக்கும்போது டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்படும். இயந்திரத்தை சேதப்படுத்தினால் மட்டும், அதற்கு உரிய தொகை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Aug 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!