நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமையில், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்தார். திமுக உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர் குத்தாலம் அன்பழகன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்சியின் அமைப்புத் தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினார் எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உட்கட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அதற்கான மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து, கட்டணத்துடன் சம்மந்தப்பட்ட நகர, ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர்களிடம் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற கோர்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநில வக்கீல்களுக்கான சமூக நல நிதியை ரூ.7 லட்சத்தில் இருந்த 10 லட்சமாக உயர்த்தி அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதிக்க கோரியும், அனைத்து சமூகத்தினரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் வகையில் கொலீஜியம் அமைக்க வேண்டியும், தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட் கிளையை அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.