டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு கூட்டம்

டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு கூட்டம்
டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் அதன் தலைவர் எஸ்கே கல்கர் தலைமையில் வருகிற 21 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் பேசுகையில் தமிழகத்துக்கு நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் ஆனால் இதுவரை 3.8 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. ஜூன் மாதம் கர்நாடக அரசு 9.17 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் அதையும் காலதாமதம் இன்றி திறக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஒழுங்காற்று குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்திபடுத்து காவிரியில் மே மாத இருப்பு படி 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி நிதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. வரும் 21ஆம் தேதி நடக்கும் காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இந்த பரிந்துரை குறித்து தமிழகம், கர்நாடகா, கேரளா புதுச்சேரியுடன் விவாதித்து இறுதியாக தமிழகத்திற்கு எத்தனை டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story