/* */

அரசு ஜீப் டிரைவர் பணிக்கு நேரடி நியமனம்: எஸ்.டி பிரிவினர் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்லில் அரசு ஜீப் டிரைவர் பணிக்கு, எஸ்.டி பிரிவினர் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு ஜீப் டிரைவர் பணிக்கு நேரடி நியமனம்:  எஸ்.டி பிரிவினர் விண்ணப்பிக்க அழைப்பு
X

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில், அரசு ஜீப் டிரைவர் காலி இடம் உள்ளது. இந்த பணியிடம் இனச்சுழற்சி ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள ஒரு குறைவு பணியிடத்திற்கு சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனமாக ஜீப் டிரைவர் பணியிடம் தேர்வு செய்யப்படவுள்ளது.

ஜீப் டிரைவர் பணியிடத்திற்கு கல்வித் தகுதியாக, 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி, தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும், வாகனங்களை இயக்குவதில் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஜீப் டிரைவர் பணிக்கு, பழங்குடியின பிரிவினர் (எஸ்டி) மட்டுமே விண்ணப்பிப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பழங்குடியின பிரிவினர் 1.7.2023 அன்று 18 வயதினை பூர்த்தி செய்தவர்களாகவும், 42 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இப்பணிக்கான விண்ணப்பங்களை நாமக்கல்.என்ஐசி.இன் என்ற வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, கல்வித்தகுதி, சாதிச் சான்று (இனம்), டிரைவிங் லைசென்ஸ், டிரைவர் அனுபவச் சான்று ஆகிய சான்றுகளின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். 31.1.2022 அன்று மாலை 5.45 க்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதியான நபர்கள் திறனாய்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியான நபர்கள் சுய விண்ணப்பபடிவத்துடன் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள வளர்ச்சிப் பிரிவில், 31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரடியாகவோ, தபால் மூலமோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Jan 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...