/* */

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 442 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 442 மையங்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 442 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 10 முறை கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 11ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை 25ம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் தடுப்பூசி செலுத்தப்படும். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 88 முகாம்களும், 19 டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 68 முகாம்களும், 322 கிராமப் பஞ்சாயத்துக்களில் 290 மையங்களும் என மெத்தம் 442 சிறப்பு முகாம்களில், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவனை செலுத்தப்படும். 18வயதுக்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...