Begin typing your search above and press return to search.
நாமக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக்கண்டித்து நாமக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழலிலும் நாள்தோறும் பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் விலையை எண்ணை கம்பெனிகள் உயர்த்தி வருவது மக்களை அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக அவற்றின் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், அதன் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும், நாமக்கல் பார்க் ரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், குழந்தான், முருகராஜன், பழமணிமாறன், ஜெயமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.