நாமக்கல்லில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்
நாமக்கல்லில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் தங்கம் கேன்சர் சென்டர் சார்பில் உலக மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், பிங்க் அக்டோபர் என்ற பெயரில், உலக மார்பகப்புற்று நோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்களிடையே மார்பகல் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், இந்த நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்ப நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிந்தால் மிக எளிதாக குணப்படுத்தலாம். பல பெண்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதால் பாதிக்கப்படுகின்றனர். எனவே அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெற உள்ள இலவச பரிசோதனை முகாமில் 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மார்பகப் பரிசோதனை செய்து பயனடையலாம் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
கோவை மகளிர் மைய இயக்குனர் டாக்டர் மிருது பாஷினி, மருத்துவ நிபுணர்கள் டாக்டர் சந்திரா, தீப்தி மிஷ்ரா, அருணாபிரபு, சுபா, இன்னர்வீல் சங்க மாவட்ட தலைவர் தாட்சாயினி, நாமக்கல் தங்கம் ஆஸ்பத்திரி மேலாண்மை இயக்குனர் டாக்டர் குழந்தைவேல், இணை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, தலைமை நிர்வாக அலுவலர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.