/* */

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை

புதுச்சத்திரம் அருகே, அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை
X

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா (40), அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று மாலை, அவர் நாமக்கல்லில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தூசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொசவம்பட்டி நால்ரோடு பகுதியில், பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு, டூ வீலரில் வந்த 3 பேர், கண்டக்டர் செந்தில்ராஜாவை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து செந்தில்ராஜா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 18 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...