/* */

நாமக்கல் ஆவின் நிறுவனத்தின் "பாதாம் பால் பவுடர் அறிமுக விழா"

நாமக்கல் ஆவின் நிறுவனத்தின் பாதாம் பால் பவுடர் அறிமுக  விழா
X

நாமக்கல் ஆவின் நிறுவனத்தின், பாதாம் பவுடரை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் அறிமுகம் செய்து, முதல் விற்பனையை ஏஜெண்டுகளுக்கு வழங்கினார்.

நாமக்கல் ஆவின் மூலம் தயாரிக்கப்பட்ட, பாதாம் பவுடரை ராஜ்சயசபா எம்.பி அறிமுகம் செய்து வைத்தார். நாமக்கல் ஆவின் அலுவலகத்தில், பாதாம் மிக்ஸ் பவுடர் அறிமுக விழா நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பால் பவுடரை அறிமுகம் செய்து, முதல்விற்பனையை துவக்கி வைத்துப் பேசியதாவது:

கடந்த 2018ம் ஆண்டு முதல் சேலம் ஆவினில் இருந்து நாமக்கல் ஆவின் பிரிக்கப்பட்டு, தனியாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் ஆவின் மூலம் 510 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் இருந்து தினசரி சுமார் 1.40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்ட உள்ளூர் விற்பனைக்காக 1.05 லட்சம் லிட்டர் பாலும், சென்னை ஆவின் ஒன்றியத்திற்க 35 லட்சம் லிட்டர் பாலும் அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 77 ஆயிரம் லிட்ட பாலும், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பால் உப பொருட்களும் ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்டு, லாபகரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-22ம் நிதியாண்டில், கொரோனா தொற்று காலத்திலும், நாமக்கல் ஆவின் ரூ.41 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்க ஒரு முறை நிலுவை இல்லாமல் பால் பணம் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் ஆவின் மூலம் பால் உபபொருட்கள் தயாரிக்கும் முயற்சியில், முதலாவதாக பாதாம் பவுடர் மிக்ஸ் இங்கேயே தயாரித்து, ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல் ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் நபார்டு உதவியுடன் நிர்வாக அலுவலகம், விற்பனை அலுவலகம், குளிர்பதன அறைகள் முதலியன கட்ட தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். நாமக்கல்லில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகமான பால் கொள்முதல் செய்யும் வகையில் 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட பால் பதனிடும் ஆலை, மத்திய மாநில அரசின் உதவியுடன் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்று கூறினார்.

Updated On: 26 April 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...