/* */

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

100 வேலை திட்டப்பணி வழங்கக் கோரி நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

100 வேலை திட்டப்பணி வழங்கக்கோரி நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் நந்தகுமார், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தினசரி சம்பளமாக ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை டவுன் பஞ்சாயத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 16 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை