/* */

75-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி

75-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

75-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி
X

சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி நாமக்கல்லில் தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்தியாவின், 75வது சுதந்திர தினவிழா அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் நகரில் தபால் துறையின் சார்பில் பேரணி நடைபெற்றது. நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். அனைத்து தபால்துறை ஊழியர்களும் தேசியக் கொடியை கையில் ஏந்தி இந்த பேரணியில் கலந்துகொண்டனர். நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, ச.பே.புதூர், உழவர் சந்தை, பஸ் நிலையம், திருச்சி ரோடு வழியாக மீண்டும் தலைமை தபால் அலுவலகத்தை அடைந்தது.

இந்த பேரணியில் உதவி கண்காணிப்பாளர் அண்ணாமலை, அஞ்சல் ஆய்வாளர்கள் கோபிநாத், கார்த்திகேயன் அஞ்சலக ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வணிக வளர்ச்சி அலவலர் சங்கர் உள்ளிட்ட திரளான தபால்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Aug 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  2. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  3. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  4. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  5. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு