நாமக்கல் மாவட்டத்தில் 16ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 16ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 40,945 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 13,84,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (79.93 சதவீதம்) 11,06,480 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி (52.80 சதவீதம்) 7,30,912 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடந்த 15 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 6,11,779 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்பசு காதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 469 நிலையான முகாம்கள் மூலமாகவும் 36 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் மொத்தம் 505 முகாம்கள் காலை 9மணி முதல் மாலை 5மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாம் பணிகளில் 210 டாக்டர்கள், 430 நர்சுகள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி நர்சுகள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த முகாமில் மொத்தம் 40,945 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.