நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Suicide News - நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
Suicide News -நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் முகிலன் (15). இவர் நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் முகிலன் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார் முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் முகிலன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனம் உடைந்து மாணவர் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2