/* */

மாநில அளவில் சாதனை படைத்த குமாரபாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள்

குமாரபாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழாவில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

மாநில அளவில்  சாதனை படைத்த குமாரபாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள்
X

மாநில அளவிலான கலைத்திருவிழாவில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இதில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டுப்புற நடனத்தில் பங்கேற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.

சாதனை மாணவர்களுக்கும், உறுதுணையாக செயல்பட்ட என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, கவிராஜ், மகேஷ்குமார், சென்னை, குமாரபாளையம் நடன இயக்குனர்கள் விஸ்வா, வெங்கடேஷ், பேருந்து கொடுத்து உதவிய ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவன இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை தலைமையாசிரியர் ஆடலரசு, பி.டி.ஏ.நிர்வாகிகள் வெங்கடேசன், அன்பரசு, சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

கல்வி கற்றல் என்கிற நிலையைத் தாண்டி மாணவ மாணவிகளிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறனை, படைப்பாற்றலை வெளிக்காட்ட, திறமையை மெருகேற்றிக் கொள்ள கல்வித் துறையின் 'கலைத் திருவிழா' மேடை அமைத்து கொடுத்துள்ளது.

6 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கலைத் திருவிழா தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது. இம்முறை மேல்முறையீடு செய்ய வாய்ப்பு, மொழித் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளில், 196 இனங்களில் கலை திருவிழா போட்டி நடைபெறுகிறது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கவின் கலை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் என ஆறு வகை போட்டிகள் 36 இனங்களில் நடைபெறுகிறது.

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுண் கலை, வாய்ப்பாட்டு, கருவி இசை - தோல் கருவிகள், துளை கருவிகள், நந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் என 9 பிரிவுகளில் போட்டியில் நடைபெறுகிறது.

மொழித்திறன் பிரிவில், கதை எழுதுதல் கவிதை புனைதல் (தமிழ், ஆங்கிலம்) பேச்சுப்போட்டி (தமிழ் ஆங்கிலம்) திருக்குறள் ஒப்பித்தல் ஆங்கில பாடல், கதை சொல்லுதல், கட்டுரை போட்டி (தமிழ் ஆங்கிலம்) பட்டிமன்றம். பள்ளி ஆண்டு மலருக்கு கட்டுரை எழுதுதல், நாளேடுகளுக்கு தலையங்கம் எழுதுதல், நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு, நன்றி உரை தயாரித்தல், மேடையில் உரையாற்றுவதற்கு ஏற்ற உரை தயாரித்தல் . தமிழ் கவிஞர்களின் பாடல் ஒப்புவித்தல், பிற மாநில மொழிகளில் கவிதை சொல்லுதல், விவாத மேடை, இணைய கருத்துருவாக்கம் ஆகியன நடைபெற்றன. வெற்றியாளர்கள் பெயர் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

போட்டியின் முடிவுகள் பற்றி பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் மேல் முறையீட்டு மன்றம் உள்ளது. உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ.500. சாதகமான தீர்ப்பு வந்தால் தொகை திருப்பி அளிக்கப்படும்.

பள்ளி அளவில் போட்டி முடிந்து ஒரு மணி நேரத்திற்குள் ரூ.500 கட்டணம் செலுத்தி முறையீடு செய்யலாம். மாநில அளவில் மேல்முறையீட்டு கட்டணம் ரூபாய் 1000. முறையீட்டு மன்றத்தில் கலை வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு போட்டிக் கும் மதிப்பீடு செய்வதற்கு 100 மதிப்பெண்கள். மாநிலப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு உண்டு . அதற்கு கீழ்நிலை போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும்.

வட்டார அளவில் முதல் 2 இடம் பெறுவர்கள் மாவட்ட போட்டிகளுக்கும், மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவுகளும் முதலிடம் பெறும் தனிநபர் மற்றும் குழுக்கள், மாநில போட்டியிலும் கலந்து கொள்ள முடியும். அரசு பள்ளிகளில் நடைபெறும் இந்த கலைத் திருவிழாவின் இறுதிப்போட்டி 2023 ஜனவரி முதல் வாரம் நடைபெறவுள்ளது.

திறமையை வெளிக்காட்ட வேண்டும்: பாட புத்தகம், தேர்வு மதிப்பெண் என்கிற நிலையைத் தாண்டி மாணவர்களிடம் புதைந்துகிடக்கும் கலைத் திறன், கற்பனை, படைப்புத் திறன்களை வெளிக்காட்டுவதற்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திறமையை வெளிக்காட்டி சாதிக்க வேண்டும். கலைத் திருவிழா போட்டிகள் நாளை உங்களை சிறப்பான கலைஞர்களாகவும், படைப் பாளர்களாகவும் உருவாக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Updated On: 31 Dec 2022 12:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  8. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  9. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு