Begin typing your search above and press return to search.
நாகையில் பெண் காவலரின் கன்னத்தை கடித்த போலீஸ் திக், திக்
நாகையில் தனியாக நடந்து வந்த பெண் போலீசை கீழே தள்ளி கன்னத்தை கடித்து வெறிச்செயலில் ஈடுபட்ட ஆண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த காவலர் பிரவீனா. இவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்து விட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு குடியிருக்கும் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவக்குமார்(33) அவரை தடுத்து நிறுத்தி கீழே தள்ளி கன்னத்தில் கடித்து தவறாக நடக்க முயற்சி செய்தாராம்.
அவரிடம் போராடி தப்பிய பெண் போலீஸ் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். நாகையில் காவலரே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.