நாகையில் சரக்கு வாங்க குவிந்த மதுப் பிரியர்கள்
நாகையில் சரக்கு வாஙக குவிந்த மதுப் பிரியர்கள் முக கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் தள்ளு, முள்ளுக்கிடையே மது பாட்டிகளை வாங்கி சென்றனர்.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் உள்ளன. நாள்தோறும் பல லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் இந்த கடைகளில் தற்போது கோடிக்கணக்கில் விற்பனையாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் காரைக்கால் மற்றும் நாகை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மதுகுடிப்போர் அரசு டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மதுபானக் கடையில் இன்று காலை முதல் குவிந்த மதுபிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டமாக மது வாங்க குவிந்தனர்.
இதில் பலர் முகக் கவசங்கள் அணியாமல் இருந்ததால் கூட்டம் அதிக அளவில் கூடியதாலும் மதுக்கடை ஊழியர் கட்டுப்படுத்த முயற்சி செய்தும் கூட்டம் கட்டுபடுத்த முடியாத நிலையில் மது விற்பனையை தொடர்ந்தனர்.
இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.