நாகை எஸ்பி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர்
திருந்தி வாழவிடாமல் போலிசார் தொல்லை கொடுப்பதாக புகார்
HIGHLIGHTS
நாகை அக்கரைக்குளம் பகுதியை சேர்ந்த சிங்காரவேலு என்பவர், 17 வயதில் நாகையில் நடந்த கொலை வழக்கில் கைதாகி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிக்கு சென்றவர். தற்போது தண்டனை காலம் முடிந்து பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருந்தி வாழும் தன்மீது நாகை நகர போலிசார் பொய் வழக்கு போடுவதாக கூறி சிங்காரவேலு நாகை எஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்பி அலுவலகம் நுழைவு வாயிலுக்கு தனது மனைவியுடன் வந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, தலையில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். தொடர்ந்து தீக்குளிக்க முயற்சித்த சிங்கார வேலுவை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருந்தி வாழும் தனது கணவரை நாகை நகர போலிசார் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து திருந்தி வாழ வழிவகை செய்யவேண்டும் என சிங்கார வேலுவின் மனைவி கோரிக்கை வைத்துள்ளார். நாகை எஸ்பி அலுவலகம் முன்பு கொலை குற்றவாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.