/* */

கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

HIGHLIGHTS

கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சாய் சரண் தேஜஸ்வி கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்றார். அதன் பிறகு மாவட்டத்தில் லாட்டரி விற்பனை, குட்கா விற்பனை போன்றவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். மேலும் குற்ற வழக்குகளிள் தொடர்புடையவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தார். இந்தநிலையில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியல்களை எடுத்து விசாரிக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, போச்சம்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொலை செய்து மும்பையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அதே போல கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பர்கூர் அருகே சிறுவனை கொலை செய்து வீசிய குற்றவாளிகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களும் ஓரிரு நாட்களில் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்து, கண்டுபிடிக்கப்படாமல் போன கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கிடப்பில் உள்ள அனைத்து கொலை, கொள்ளை வழக்குகளும் தற்போது தூசி தட்டி விசாரிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 30 Aug 2021 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!