/* */

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 895 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர்; இன்று ஒரேநாளில் 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 895 பேர் பாதிப்பு
X

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்; ஒரே நாளில் 895 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 48 வயது ஆண். கொரோனா பாதிப்பு காரணமாக இவர் கடந்த 2ம்தேதி ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 8ம் தேதி இறந்தார்.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 45 வயது பெண், கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், கடந்த 8ம் தேதி இறந்தார்.

அதேபோல், 28 வயது ஆண், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் 2ம் தேதி கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 8ம் தேதி இறந்தார். கிருஷ்ணகிரியை சேர்ந்த 47 வயது ஆண், கொரோனா பாதிப்பால் கடந்த 30ம் தேதி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 9ம் தேதி இறந்து விட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 256 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 984 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 151ஆக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 May 2021 3:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...