கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 895 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர்; இன்று ஒரேநாளில் 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்; ஒரே நாளில் 895 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 48 வயது ஆண். கொரோனா பாதிப்பு காரணமாக இவர் கடந்த 2ம்தேதி ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 8ம் தேதி இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 45 வயது பெண், கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், கடந்த 8ம் தேதி இறந்தார்.
அதேபோல், 28 வயது ஆண், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் 2ம் தேதி கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 8ம் தேதி இறந்தார். கிருஷ்ணகிரியை சேர்ந்த 47 வயது ஆண், கொரோனா பாதிப்பால் கடந்த 30ம் தேதி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 9ம் தேதி இறந்து விட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 256 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 984 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 151ஆக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.