Begin typing your search above and press return to search.
தேர்தல் எதிரொலி: நள்ளிரவிலும் தொடரும் தீவிர சோதனை
கரூர் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவிலும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
HIGHLIGHTS
தமிழகத்தில் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல், நடைபெற உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபுசங்கர், உத்தரவின் கீழ் பல்வேறு பகுதிகளில் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் தேர்தல் பறக்கும் படை சோதனை ஆங்காங்கே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் சர்ச் கார்னர் பகுதியில், நள்ளிரவிலும் தேர்தல் பறக்கும் படை அப்பகுதியின் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து பின்னர் அனுப்பி வைக்கின்றனர். தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய இந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது