பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு நினைவஞ்சலி
பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு கரூர் எஸ்பி நீத்தார் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
HIGHLIGHTS
காவல்துறையில் பணியாற்றும்போது வீரமரணமடைந்த, ஆண்டுதோறும், அக்., 21ம் தேதி நீத்தார் நினைவு நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்தாண்டு செப் 1ம் தேதி முதல், நடப்பாண்டு ஆக 30ம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம், 377 போலீசார் பணியின்போது உயிர் நீத்துள்ளனர். இவர்களுக்கு இன்று காலை கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நீத்தார் நினைவு தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். உயிர்நீத்த போலீசாரின் பெயர்கள் நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கண்ணன், ராதாகிருஷ்ணன், கீதாஞ்சலி, அசோக்குமார் , டிஎஸ்பி தேவராஜன், முத்தமிழ் செல்வன், ஶ்ரீதர் உள்பட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.