மறு உத்தரவு வரும் வரை படகு போக்குவரத்து இல்லை
- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தது. அதேபோல் கடற்கரை சுற்றுலா தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வரும் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது .
இது குறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த படகு சேவை அரசின் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.