/* */

தொடர் குற்ற செயலளில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

குமரியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 நபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தொடர் குற்ற செயலளில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
X

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியை சேர்ந்த அர்ஷத் அலி (20), அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த ஜோன் கிளிண்டன் (32), நீண்டகரை பகுதியை சேர்ந்த ஸ்பர்ஜன் சாமுவேல் (50), மற்றும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரீகன்(35), அந்தோனிதாஸ் (38) ஆகியோர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் 5 பேர் மீதும் களியக்காவிளை, கொல்லங்கோடு, ஆசாரிபள்ளம் மற்றும் வடசேரி காவல் நிலையங்களில் போதை பொருட்கள் விற்பனை, அடிதடி, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் உள்ளது.

இவர்கள் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் 5 நபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார், அதன்படி அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு குமரி மாவட்ட காவல்துறையால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை