தொடர் குற்ற செயலளில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
குமரியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 நபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியை சேர்ந்த அர்ஷத் அலி (20), அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த ஜோன் கிளிண்டன் (32), நீண்டகரை பகுதியை சேர்ந்த ஸ்பர்ஜன் சாமுவேல் (50), மற்றும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரீகன்(35), அந்தோனிதாஸ் (38) ஆகியோர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் 5 பேர் மீதும் களியக்காவிளை, கொல்லங்கோடு, ஆசாரிபள்ளம் மற்றும் வடசேரி காவல் நிலையங்களில் போதை பொருட்கள் விற்பனை, அடிதடி, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவர்கள் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் 5 நபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார், அதன்படி அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு குமரி மாவட்ட காவல்துறையால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.