/* */

பூந்தண்டலம் ஊராட்சி வாக்குசாவடியில் மீண்டும் நாளை வாக்குபதிவு

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பூந்தண்டலம் கிராம ஊராட்சியில் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பூந்தண்டலம் ஊராட்சி வாக்குசாவடியில் மீண்டும் நாளை வாக்குபதிவு
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் நேற்று நடைபெற்றது.

வாக்குப்பதிவின் போது குன்றத்தூர் ஊராட்சி ஓன்றியத்திற்குபட்ட பூந்தண்டலம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 12 காண உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளரின் பெயர் சின்னம் வாக்குச்சீட்டில் இல்லை எனக்கூறி வேட்பாளரின் எதிர்ப்பால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வட்டார தேர்தல் மேற்பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்டோர் விசாரணையை மேற்கொண்ட பின் இன்று அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பில் , குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு 12 க்கான உறுப்பினர் தேர்தல், பூந்தண்டலம் ஊராட்சி வாக்கு சாவடி எண்-173 ( அனைத்து வாக்காளர்களும்) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுச்சேரி வாக்குச்சாவடியில் நாளை திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க