/* */

காஞ்சிபுரத்தில் தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் பொன்னையா ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மெகா கெரோனா தடுப்பூசி முகாமை கண்காணிப்பு அலுவலர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் பொன்னையா ஆய்வு
X

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமினை ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர் பா. பொன்னையா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் பேரூராட்சிகள் பெருநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் 609 மையங்களில் இன்று காலை 7 மணி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்து பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் பா.பொன்னையா இன்று ஸ்ரீபெரும்புதூர் படப்பை காஞ்சிபுரம் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த முகாம்களில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விவரங்கள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வந்த அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பின் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Updated On: 12 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  8. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  9. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  10. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா