/* */

இறந்தவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

காஞ்சிபுரத்தில் இறந்து 40 நாட்கள் ஆன முதியவருக்கு இரண்டாவது தடுப்பூசியை செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்.

HIGHLIGHTS

இறந்தவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
X

உயிரழந்த நபர் ரகு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி மற்றும் இரண்டு தவணைகளில் செலுத்தி கொண்டதாக ஆவணம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று 500 இடங்களில் மாவட்டம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 99 சதவீத பேர்களும் இரண்டாவது தடுப்பூசிகளை 43 சதவீத நபர்களும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவை சேர்ந்த பொம்மை தயாரிப்பாளர் ரகு என்பவர் கடந்த மாதம் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தி கொண்டுள்ளார்.

இவர் இறந்து 40 நாட்கள் ஆன நிலையில், இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இரண்டாம் தவணை ஊசி செலுத்தி கொண்டதாக அவரது எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

திடீரென அலைபேசியில் தகவல் மணி அடித்ததும் குறுஞ்செய்தியை அவரது தம்பி மகன் பார்த்தபோது இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு வந்த செய்தி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்து 40 நாட்கள் ஆன நபருக்கு தடுப்பூசி செலுத்தியதாக அதனுடைய சர்டிபிகேட் பதிவிறக்கம் செய்யப்பட்டு அக்குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்

Updated On: 21 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி